விழுந்தவுடன் தன் விரல் கொண்டு தாங்கிடுவாள்,
தாங்காமல் கதறியதும் கருணை எல்லாம் காட்டியதில்லை,
உடலென்றும் மனதென்றும் வேறுபாடேதும் பார்த்ததில்லை,
பஞ்சமின்றி பக்குவமாய் இரண்டிற்கும் பகிர்ந்தளித்திடுவாள்.
இவளின்றி உயிரில்லை, இவள்வந்தாள் உயிரே தொல்லை,
மண்ணகத்தில் இவளற்ற உயிர்ப்பும் இல்லை, இறப்பும் இல்லை
பாமரனை கூட பரமஹம்சராக ஆக்குவதில் பங்கு இவளுக்கே அதிகம்.
பெண்களுக்கோ, மாதம் ஒருமுறை மறக்காமல் வந்தருள்வாள்,
சிறிது நேரம் விழுந்தெழுந்து புரண்ட உடன் விளையாட்டாய் மறைந்திடுவாள்,
உடலில் ஊடுருவி இவள் போடும் ஆட்டம் நிறைந்ததுதான் நம்
வாழ்வென்னும் இந்த ஓட்டம் .....
Never read about pain like this elsewhere ma.. it's fantastic 👌
ReplyDeleteThanks ma. :):)
ReplyDelete